என் இயலாமையில் நீர் செயல்படுவீர்
உம கரம் என்னை விலகாதிருக்கும்
மலைகளை பெயர்பீர் என்றால்
என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்
மரித்தோரை எழச்செய்தீர் என்றால்
என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம்
கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்.
வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும்
உம்மால் அன்றி இது யாரால் கூடும்?
ஆகாயத்து பட்சிகளை போசிப்பீர் என்றால்
என்னையும் போஷிப்பது நிச்சயமே
காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரே என்றால்
என்னை குறைவின்றி நடத்துவது நிச்சயமே
கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்.
என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
என்றாகிலும் என்னை மறந்தது உண்டா
HOME
More Songs
No comments:
Post a Comment